எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Tuesday, April 15, 2014

வில்வ மரம் பத்தி சிலருக்கு தெரிஞ்சிருக்கும். அதோட பலனும் ஒருசிலருக்கும் தெரிஞ்சிருக்கும். பெரும்பாலான மரங்கள் இந்துக்கோவில்களில் வளர்க்கப்படுவதுண்டு. ஆலயம் சென்று வழிபட்டு செல்வோருக்கு நோய்கள் நீங்கி சுகம் தருவதில் மரங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. இறை நம்பிக்கை ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மரங்களுக்கும் ஒரு தன்மை இருப்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டதே. அந்தவகையில் சிவன்கோவில்களில் வில்வ மரம் வளர்க்கப்படுகின்றன. ஈஸ்வரன் வில்வ மரத்தில்தான் உருவானார் என்று சிதம்பர ரகசியம் சொல்கிறது. அந்த விவாதத்துக்குள் நாம் போக வேண்டாம். வில்வம் என்றால் உயிர். உயிரை பாதுகாக்கும் பிராணன் வில்வத்தில் அதிகம் இருக்கிறது. வில்வத்தில் 10 வகை உள்ளது. அது என்னென்னு தெரிஞ்சிக்கிடணுமா? வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபுத்திரி, நவ வில்வம், தச வில்வம், கற்பூர வில்வம்னு மொத்தம் பத்து வில்வம் இருக்கு. வில்வ இலைக்கொழுந்து... பெண்களுக்கு மாதவிலக்கு வர்ற நேரத்துல வரக்கூடிய வயித்துவலிக்கு நல்ல மருந்து. மாதவிலக்கு வந்த நாள்ல மூணுல இருந்து 5 நாள் வரைக்கும் தினமும் காலைல குளிச்சி முடிச்சி சுண்டைக்காய் அளவு வில்வக்கொழுந்தை அரைச்சி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா வலி சரியாகுறதோட கரு உண்டாகுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதேபோல பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பாடு (அதிக மாத விலக்கு) தீரணும்னா 10 கிராம் வில்வ இலையை அரைச்சி வெறும் வயித்துல தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தா 10 - 20 நாளில் குணம் கிடைக்கும். பெண்களுக்கு மட்டுமில்ல விந்துக்குறைபாட்டால அல்லல்படுற ஆண்களுக்கும் இது நல்ல மருந்து. இதேபோல வில்வ இலையை அரைச்சி காலைல சாப்பிட்டு வந்தா நீர்த்துப்போன விந்து கட்டியாகி உயிரணு பலமாகும். வில்வ பிசின் சாப்பிட்டா ஆண்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்தபடி வில்வ பழத்தை சர்பத் செஞ்சி குடிச்சா இருதய ஓட்டை அடைபடுறதோட கல்லீரல், கணையத்துல வர்ற நோய்கள் சரியாகும். வில்வ இலை, நல்லெண்ணெய், மிளகு சேர்த்து காய்ச்சின எண்ணெயை தலையில தடவி குளிச்சா ஜலதோஷம், இருமல் வராம தடுக்கும். இது எல்லாத்துக்கும் மேல சர்க்கரை நோயாளிகள், புற்று நோயாளிகள் தினமும் காலை ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தா நோய்கள்ல இருந்து விடுதலை கிடைக்கும்.