எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Thursday, June 21, 2018


உடலுறவின் உச்சகட்டம் உணர்ச்சிப் பரவசநிலை... நிகழ்வது எப்படி? ஆண் பெண் உடலுறவு பற்றி பேசுவோம், விவாதிப்போம். அது எத்தனை நிலைகளைக் கொண்டது என்பது பற்றியோ அதன் உச்சக்கட்டமான புணர்ச்சிப் பரவசநிலை என்பதுபற்றியோ அப்போது கிடைக்கும் இன்பத்தின் உச்சநிலையை அடைய என்ன வழிகள் என்பதுபற்றியோ நம்மில் பலருக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பலருக்கும் அந்த உச்சநிலையை முழுமையாக அடையவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உடலுறவில் ஸ்பரிசம் என்னும் தொடு உணர்ச்சியில் தொடங்கி உராய்வு, உட்புகுத்துதல், அசைவுகள், உச்சகட்டம் என்ற நிலைகள் இருக்கின்றன. அதன்படி எல்லோரும் செயல்படுவதில்லை. பெண்ணின் உறுப்பினுள் ஆணின் உறுப்பை உட்செலுத்தியதும் செயல்பாட்டில் இறங்குவது அடுத்த சில நிமிடங்களில் விந்து வெளியேற்றுவதுடன் அத்தனையும் முடிந்துவிட்டதாகக் கிளம்பிவிடுவோம். ஆனால், அதுவல்ல உடலுறவு. அது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி விரிவாகப் பேசலாம். ஆனால், இங்கே நாம் புணர்ச்சிப் பரவசநிலை என்றால் என்ன என்பதுபற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம். புணர்ச்சிப் பரவசநிலை... இதை ஆங்கிலத்தில் ஆர்கஸம் (Orgasm) என்பார்கள். பாலின்ப உச்சி என்றும் சொல்வார்கள். செக்சுவல் க்ளைமாக்ஸ் (sexual climax) என்றும் இதற்கு வேறொரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது நீண்ட நெடிய பாலுணர்வுத் தூண்டலுக்குப் பிறகு ஏற்படும் உடல், உளவியல் மற்றும் மெய்ப்பாடு (எமோஷன் - emotion) போன்ற நிலைகளில் ஓர் நிறைவைத் தரும் தூண்டுதலைக் குறிக்கக்கூடியது. இந்த நிகழ்வின்போது விந்து தள்ளுதல், மேனி (உடல்) சிவத்தல், தானாக இயங்கும் தசைச்சுருக்கங்கள் ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படும். புணர்ச்சிப் பரவசநிலை என்பது தும்மலைப் போன்றது என்றும், அந்த உணர்வை அனுபவிக்க மட்டுமே முடியும், விவரிப்பது கஷ்டம் என்றும் கூறுகிறார்கள் மருத்துவ வல்லுனர்கள். பொதுவாக செக்ஸ் பார்ட்னருடன் ஒரே அலைவரிசையில் இயங்கும்போது, கிடைக்கும் கிளர்ச்சியும் அதைத்தொடர்ந்த விந்து வெளியேற்றமும் இன்பத்தின் உச்சத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதைத்தொடார்ந்து ஓர் ஆயாசம் ஏற்படும். அதுதான் `புணர்ச்சிப் பரவசநிலை' எனப்படும் `ஆர்கஸம்' என்கிறார்கள். செக்ஸ் உறவில் ஏற்படும் எத்தனைபேருக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகிறது என்பது இன்றைக்கு கேள்விக்குறியே? அதனுள்ளே செல்வதற்குமுன் புணர்ச்சி என்றால் என்ன? என்பது பற்றி அறிந்துகொள்வோம். புணர்ச்சி என்பதற்கு சேர்க்கை, கலவி, இணைதல் என பல பொருள்கள் உள்ளன. சேர்க்கை என்பதற்கு ஒன்று சேர்தல், ஒன்றிப்பு. சேர்ந்து உருவான ஒன்று, சேர்ந்து பழகும் உறவு என்பதுபோன்ற பல பொருள்கள் உண்டு. கலவி என்பதற்கு புணர்ச்சி, உடலுறவு, பாலுறவு, தொடர்பு என்ற பொருள்களும் காணக்கிடைக்கின்றன. அது இன்னும் நீண்டுகொண்டே செல்கின்றன. பரவசம் என்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி, மெய்மறந்த நிலை என்ற ஒரு பொருள் உண்டு. இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், களிப்பு மிகுதியால் சுற்றி நடப்பதை உணரமுடியாத நிலை என்ற ஒரு பொருளும் சொல்லப்படுகிறது. இத்தகைய ஒரு நிலை ஆண் பெண் இருவருக்கும் ஏற்பட வேண்டும். மேலும் அப்போது பெருமகிழ் உணர்வு மற்றும் கீழ் இடுப்புத் தசைகளுக்கு அதிக அளவிலான ரத்த ஓட்டம், ஒழுங்கான இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் (பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு இயக்குநீர்) சுரப்பதால் ஏற்படும் ஓர் அயர்ச்சி உணர்வு போன்ற சில நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இது சிலநேரங்களில் இருவருக்கும் மாறுபட்ட நிலைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்போது மிகுந்த அழுத்தத்துடன் விந்து வெளியேறும். ஒருமுறை பரவசநிலை ஏற்பட்டால் உடனடியாக மீண்டும் பரவசநிலை ஏற்படாது. அடுத்த பரவசநிலை ஏற்பட ஒவ்வொருவரின் வயது மற்றும் அவர்களது உடல்வாகைப் பொறுத்து ஒரு நிமிடத்தில் இருந்து அரைநாள்கூட ஆகலாம். பெண்களுக்கு பரவசநிலை ஏற்படுவதற்கு முன் சில சுரப்பிகள் சுரக்கப்படுவதால் அவர்களது யோனியின் ஓரங்கள் நனையும். மேலும்பெண்களுக்கு அப்போது ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் பெண்குறியின் மென்திசுக்களில் ரத்தம் தங்குவதன்மூலம் விரிவடையும். சில பெண்களுக்கு உடல் முழுவதும் கூடுதலாக ரத்தம் பாய்வதால் அவர்களுக்கு வெட்கம் ஏற்பட்டு அவர்களது உடல் சிவந்து காணப்படும். இத்தகைய சூழலே பரவசநிலையை பெண்ணானவள் நெருங்கிக்கொண்டிருக்கிறாள் என்று பொருள். அப்போது பெண்குறியின் நுனி மூடிக்கொண்டு உள்வாங்கும். அத்துடன் சிற்றுதடுகள் எனப்படும் ஓரங்கள் இருண்டுவிடும். அடுத்தகட்டமாக பெண்குறியானது மேலும் சுருங்குவதால் அங்கே ஓர் அடைப்பு ஏற்படும். இந்தநிலையில் உள்ளே இருக்கும் ஆண்குறியை பெண்குறி இறுகப்பற்றிக்கொள்ளும். பற்றிக்கொள்ளும் என்பதைவிட கவ்விக்கொள்ளும் என்று சொல்வது சரியாக இருக்கும். இதையடுத்து தொடர்ந்து சில மாற்றங்களை பெண்களிடம் காணமுடியும். முழுமையான பரவசநிலை ஏற்படும்போது பெண்ணுறுப்பு சுருங்கி விரியும். ஆனாலும் ஒருமுறை புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்த பெண்ணால் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பரவசநிலையை அடையமுடியும். இன்றைக்கு முழுமையான பரவசநிலையை அடையமுடியாமல் தவிக்கும் பலரைக் காண முடிகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அதுபற்றி மீண்டும் பேசுவோம்.