எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Thursday, June 21, 2018


உடலுறவின் உச்சகட்டம் உணர்ச்சிப் பரவசநிலை... நிகழ்வது எப்படி? ஆண் பெண் உடலுறவு பற்றி பேசுவோம், விவாதிப்போம். அது எத்தனை நிலைகளைக் கொண்டது என்பது பற்றியோ அதன் உச்சக்கட்டமான புணர்ச்சிப் பரவசநிலை என்பதுபற்றியோ அப்போது கிடைக்கும் இன்பத்தின் உச்சநிலையை அடைய என்ன வழிகள் என்பதுபற்றியோ நம்மில் பலருக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பலருக்கும் அந்த உச்சநிலையை முழுமையாக அடையவேண்டும் என்ற ஆவல் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உடலுறவில் ஸ்பரிசம் என்னும் தொடு உணர்ச்சியில் தொடங்கி உராய்வு, உட்புகுத்துதல், அசைவுகள், உச்சகட்டம் என்ற நிலைகள் இருக்கின்றன. அதன்படி எல்லோரும் செயல்படுவதில்லை. பெண்ணின் உறுப்பினுள் ஆணின் உறுப்பை உட்செலுத்தியதும் செயல்பாட்டில் இறங்குவது அடுத்த சில நிமிடங்களில் விந்து வெளியேற்றுவதுடன் அத்தனையும் முடிந்துவிட்டதாகக் கிளம்பிவிடுவோம். ஆனால், அதுவல்ல உடலுறவு. அது பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதுபற்றி விரிவாகப் பேசலாம். ஆனால், இங்கே நாம் புணர்ச்சிப் பரவசநிலை என்றால் என்ன என்பதுபற்றி தெரிந்து கொள்ளவிருக்கிறோம். புணர்ச்சிப் பரவசநிலை... இதை ஆங்கிலத்தில் ஆர்கஸம் (Orgasm) என்பார்கள். பாலின்ப உச்சி என்றும் சொல்வார்கள். செக்சுவல் க்ளைமாக்ஸ் (sexual climax) என்றும் இதற்கு வேறொரு விளக்கம் சொல்லப்படுகிறது. அதாவது நீண்ட நெடிய பாலுணர்வுத் தூண்டலுக்குப் பிறகு ஏற்படும் உடல், உளவியல் மற்றும் மெய்ப்பாடு (எமோஷன் - emotion) போன்ற நிலைகளில் ஓர் நிறைவைத் தரும் தூண்டுதலைக் குறிக்கக்கூடியது. இந்த நிகழ்வின்போது விந்து தள்ளுதல், மேனி (உடல்) சிவத்தல், தானாக இயங்கும் தசைச்சுருக்கங்கள் ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படும். புணர்ச்சிப் பரவசநிலை என்பது தும்மலைப் போன்றது என்றும், அந்த உணர்வை அனுபவிக்க மட்டுமே முடியும், விவரிப்பது கஷ்டம் என்றும் கூறுகிறார்கள் மருத்துவ வல்லுனர்கள். பொதுவாக செக்ஸ் பார்ட்னருடன் ஒரே அலைவரிசையில் இயங்கும்போது, கிடைக்கும் கிளர்ச்சியும் அதைத்தொடர்ந்த விந்து வெளியேற்றமும் இன்பத்தின் உச்சத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதைத்தொடார்ந்து ஓர் ஆயாசம் ஏற்படும். அதுதான் `புணர்ச்சிப் பரவசநிலை' எனப்படும் `ஆர்கஸம்' என்கிறார்கள். செக்ஸ் உறவில் ஏற்படும் எத்தனைபேருக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படுகிறது என்பது இன்றைக்கு கேள்விக்குறியே? அதனுள்ளே செல்வதற்குமுன் புணர்ச்சி என்றால் என்ன? என்பது பற்றி அறிந்துகொள்வோம். புணர்ச்சி என்பதற்கு சேர்க்கை, கலவி, இணைதல் என பல பொருள்கள் உள்ளன. சேர்க்கை என்பதற்கு ஒன்று சேர்தல், ஒன்றிப்பு. சேர்ந்து உருவான ஒன்று, சேர்ந்து பழகும் உறவு என்பதுபோன்ற பல பொருள்கள் உண்டு. கலவி என்பதற்கு புணர்ச்சி, உடலுறவு, பாலுறவு, தொடர்பு என்ற பொருள்களும் காணக்கிடைக்கின்றன. அது இன்னும் நீண்டுகொண்டே செல்கின்றன. பரவசம் என்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி, மெய்மறந்த நிலை என்ற ஒரு பொருள் உண்டு. இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், களிப்பு மிகுதியால் சுற்றி நடப்பதை உணரமுடியாத நிலை என்ற ஒரு பொருளும் சொல்லப்படுகிறது. இத்தகைய ஒரு நிலை ஆண் பெண் இருவருக்கும் ஏற்பட வேண்டும். மேலும் அப்போது பெருமகிழ் உணர்வு மற்றும் கீழ் இடுப்புத் தசைகளுக்கு அதிக அளவிலான ரத்த ஓட்டம், ஒழுங்கான இடுப்புத் தசைச் சுருக்கங்கள், புரோலாக்டின் (பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு இயக்குநீர்) சுரப்பதால் ஏற்படும் ஓர் அயர்ச்சி உணர்வு போன்ற சில நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இது சிலநேரங்களில் இருவருக்கும் மாறுபட்ட நிலைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆண்களுக்கு புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும்போது மிகுந்த அழுத்தத்துடன் விந்து வெளியேறும். ஒருமுறை பரவசநிலை ஏற்பட்டால் உடனடியாக மீண்டும் பரவசநிலை ஏற்படாது. அடுத்த பரவசநிலை ஏற்பட ஒவ்வொருவரின் வயது மற்றும் அவர்களது உடல்வாகைப் பொறுத்து ஒரு நிமிடத்தில் இருந்து அரைநாள்கூட ஆகலாம். பெண்களுக்கு பரவசநிலை ஏற்படுவதற்கு முன் சில சுரப்பிகள் சுரக்கப்படுவதால் அவர்களது யோனியின் ஓரங்கள் நனையும். மேலும்பெண்களுக்கு அப்போது ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் பெண்குறியின் மென்திசுக்களில் ரத்தம் தங்குவதன்மூலம் விரிவடையும். சில பெண்களுக்கு உடல் முழுவதும் கூடுதலாக ரத்தம் பாய்வதால் அவர்களுக்கு வெட்கம் ஏற்பட்டு அவர்களது உடல் சிவந்து காணப்படும். இத்தகைய சூழலே பரவசநிலையை பெண்ணானவள் நெருங்கிக்கொண்டிருக்கிறாள் என்று பொருள். அப்போது பெண்குறியின் நுனி மூடிக்கொண்டு உள்வாங்கும். அத்துடன் சிற்றுதடுகள் எனப்படும் ஓரங்கள் இருண்டுவிடும். அடுத்தகட்டமாக பெண்குறியானது மேலும் சுருங்குவதால் அங்கே ஓர் அடைப்பு ஏற்படும். இந்தநிலையில் உள்ளே இருக்கும் ஆண்குறியை பெண்குறி இறுகப்பற்றிக்கொள்ளும். பற்றிக்கொள்ளும் என்பதைவிட கவ்விக்கொள்ளும் என்று சொல்வது சரியாக இருக்கும். இதையடுத்து தொடர்ந்து சில மாற்றங்களை பெண்களிடம் காணமுடியும். முழுமையான பரவசநிலை ஏற்படும்போது பெண்ணுறுப்பு சுருங்கி விரியும். ஆனாலும் ஒருமுறை புணர்ச்சிப் பரவசநிலையை அடைந்த பெண்ணால் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் பரவசநிலையை அடையமுடியும். இன்றைக்கு முழுமையான பரவசநிலையை அடையமுடியாமல் தவிக்கும் பலரைக் காண முடிகிறது. குறிப்பாக ஆண்களுக்கு இந்த நிலை ஏற்படுகிறது. அதுபற்றி மீண்டும் பேசுவோம்.

Tuesday, March 20, 2018

தமிழர்களின் பாரம்பரிய உணவு பழைய கஞ்சி! ஆற்று நீர் வாதம் போக்கும் அருவி நீர் பித்தம் போக்கும் சோற்று நீர் இரண்டையும் போக்கும்' என்று சித்தர்கள் பாடலில் கூறப்பட்டுள்ளது. ஆற்று நீரும் அருவி நீரும் மூலிகைகளைக் கடந்து வருவதுடன் மலைகளில் உள்ள இயற்கை தாதுக்கள் கலந்து மருத்துவத்தன்மை பெறுகின்றன. அந்தவகையில் இவற்றுக்கு மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. வாதம், பித்தம் இரண்டையும் போக்கக்கூடிய வல்லமை பெற்றது சோற்று நீர் என்றால் அது மிகையாகாது ``பழைய சோறு... தமிழர்களின் பாரம்பர்ய உணவு. ஊட்டம் தரும் அந்த உணவு அரிசியில் சமைக்கப்பட்டது. அரிசி உணவை பல்வேறு வடிவங்களில் சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். பச்சரிசியில் சமைத்தால் `பொங்கல்' என்றும், வேகவைத்த அரிசியில் சமைத்தால் அதற்கு `புழுங்கல்' என்றும் பெயர் வைத்தனர். இதே அரிசியை மங்கல் நிகழ்ச்சிகளில் சமைத்தால் `சிறு சோறு' என்றார்கள்; அமங்கலமான நிகழ்ச்சிகளில் சமைப்பதை `பெருஞ்சோறு' என்றார்கள். உணவின் தன்மைக்கேற்ப வெண்சோறு, பாற்சோறு, உளுத்தஞ்சோறு, செஞ்சோறு, கொழுஞ்சோறு, நெல்சோறு, புளிச்சோறு, ஊன்சோறு என்று பெயர் வைத்தனர். இதில் சைவம் மற்றும் அசைவ வகை உணவுகள் உண்டு. சைவ வகை உணவுகள் வரிசையில் சோறு, அடிசில், அழினி, கூழ், அவிழ், கொன்றி, நிமிரல், புழுங்கல், பொம்மன், மிதவை போன்றவை இருந்தன. இதில் கஞ்சியும் ஒரு உணவாக இருந்துள்ளது. `கஞ்சியும் தண்ணியுமா கலக்கிக்குடு...கொஞ்சம் குடிச்சாக்கூட போதும்' என்பார்கள். ஆம், கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவையாக இருக்கும். இந்த கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்று பல பெயர்களில் அழைப்பார்கள். பழைய சோறு பாரம்பர்யமானது. தெலுங்கர், மராத்தியர்களின் ஆதிக்கத்துக்குப் பிறகு எண்ணெய்ப்பலகாரங்கள் நம் மத்தியில் அறிமுகமாயின. அதேபோல் முஸ்லிம்கள், ஐரோப்பியர்கள் செல்வாக்கு பெற்ற காலத்தில் கார உணவுகள் பெருமளவில் பழக்கத்துக்கு வந்தன. இதையடுத்து பல்வேறு நிலைகளில் மேலைநாட்டினரின் ஃபாஸ்ட்புட் உணவுகள் நம்மை ஆட்கொண்டுவிட்டதால் நாம் பாரம்பர்ய உணவுகளைவிட்டு மெள்ள மெள்ள விலகிவிட்டோம். என்னதான் மாற்றங்கள் வந்தாலும் பழைய சோறு சத்து நிறைந்தது என்பது மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. பழைய சோற்றில் அப்படி என்னதான் இருக்கிறது அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த முடிவுகளைக் கண்டு மெய்சிலிர்த்துப்போனார்கள். அந்த அளவுக்கு எண்ணற்ற சத்துகளைக் கொண்டுள்ளது பழைய சோறு. மகத்துவம் மிக்க பழைய சோற்றை மறந்து அதற்குப்பதிலாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் என காலத்துக்கு ஏற்ப உணவுகளை மாற்றிக்கொண்டே வருகிறோம். பழைய சோற்றில் மற்ற உணவுகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கக்கூடியவை. லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும் ஏற்ற உணவு இது. உடல் சூடு ஏற்படாமல் தடுக்கும்; மலச்சிக்கல் பிரச்னை நீக்கும்; சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும்; ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும்; வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த இந்த பழைய சோற்றைச் செய்வதற்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசியாக இருந்தால் மிகவும் நல்லது. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடிய உணவே இந்த பழைய சோறு. சமைத்த சோறு வீணாகாமல் இருக்க இப்படி தண்ணீர் ஊற்றி வைத்த சாதாரண நிகழ்வு ஒரு வரலாறாக மாறியிருக்கிறது. இன்றைக்கு அந்த உணவை வெளிநாடுகளில் போட்டி போட்டு வாங்கிச் சாப்பிடும் அளவுக்கு பிரபலமாகி இருக்கிறது. முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றில் வைட்டமின் சத்துகளும் நல்ல பாக்டீரியாக்களும் நிறைந்திருக்கும் சூழலில் சின்ன வெங்காயம் உடன் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக அள்ளிக்கொடுக்கிறதாம். இந்த உணவைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது. மிக முக்கியமாக இப்போது இரவில் பனி பெய்தாலும் பகலில் வெயில் கொளுத்துகிறது. இதனால் கண் நோய்கள், அம்மை, மஞ்சள்காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்க வாய்ப்புள்ளது. இவை எல்லாம் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு. பழைய சோற்றின் மகத்துவம் குறித்து அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, `காலைச் சிற்றுண்டியாக பழைய சோறு சாப்பிடுவதால் உடல் லேசாகி சுறுசுறுப்படைகிறது; இரவில் நீர் ஊற்றி மூடிவைப்பதால் அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன' என்கிறார். அரிசி சோறு மட்டுமல்லாமல் கேழ்வரகு, கம்பு போன்றவற்றை ஊற வைத்து இடித்து மாவாக்கி நீர் விட்டுக் கரைத்து புளிக்க வைக்க வேண்டும். இவ்வாறு முதல்நாள் கரைத்து வைத்த மாவு மறுநாள் காலை மாவு புளித்து, பொங்கி இருக்கும். மறுநாள் காலையில் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க வைத்து, புளித்த அந்த மாவை ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். உப்பு கலந்து கட்டி சேராமல் கிளறி இறக்க வேண்டும். இதனுடன் தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். இதை கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். தினை போன்ற மற்ற சிறுதானியங்களிலும் இதேபோல் செய்து சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம்.