வில்வ மரம் பத்தி சிலருக்கு தெரிஞ்சிருக்கும். அதோட பலனும் ஒருசிலருக்கும் தெரிஞ்சிருக்கும். பெரும்பாலான மரங்கள் இந்துக்கோவில்களில் வளர்க்கப்படுவதுண்டு. ஆலயம் சென்று வழிபட்டு செல்வோருக்கு நோய்கள் நீங்கி சுகம் தருவதில் மரங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. இறை நம்பிக்கை ஒருபுறமிருக்க, ஒவ்வொரு மரங்களுக்கும் ஒரு தன்மை இருப்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டதே. அந்தவகையில் சிவன்கோவில்களில் வில்வ மரம் வளர்க்கப்படுகின்றன. ஈஸ்வரன் வில்வ மரத்தில்தான் உருவானார் என்று சிதம்பர ரகசியம் சொல்கிறது. அந்த விவாதத்துக்குள் நாம் போக வேண்டாம்.
வில்வம் என்றால் உயிர். உயிரை பாதுகாக்கும் பிராணன் வில்வத்தில் அதிகம் இருக்கிறது. வில்வத்தில் 10 வகை உள்ளது. அது என்னென்னு தெரிஞ்சிக்கிடணுமா? வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபுத்திரி, நவ வில்வம், தச வில்வம், கற்பூர வில்வம்னு மொத்தம் பத்து வில்வம் இருக்கு.
வில்வ இலைக்கொழுந்து... பெண்களுக்கு மாதவிலக்கு வர்ற நேரத்துல வரக்கூடிய வயித்துவலிக்கு நல்ல மருந்து. மாதவிலக்கு வந்த நாள்ல மூணுல இருந்து 5 நாள் வரைக்கும் தினமும் காலைல குளிச்சி முடிச்சி சுண்டைக்காய் அளவு வில்வக்கொழுந்தை அரைச்சி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா வலி சரியாகுறதோட கரு உண்டாகுறதுக்கு வாய்ப்பு இருக்கு. இதேபோல பெண்களுக்கு வரக்கூடிய பெரும்பாடு (அதிக மாத விலக்கு) தீரணும்னா 10 கிராம் வில்வ இலையை அரைச்சி வெறும் வயித்துல தினமும் 3 வேளை சாப்பிட்டு வந்தா 10 - 20 நாளில் குணம் கிடைக்கும். பெண்களுக்கு மட்டுமில்ல விந்துக்குறைபாட்டால அல்லல்படுற ஆண்களுக்கும் இது நல்ல மருந்து. இதேபோல வில்வ இலையை அரைச்சி காலைல சாப்பிட்டு வந்தா நீர்த்துப்போன விந்து கட்டியாகி உயிரணு பலமாகும். வில்வ பிசின் சாப்பிட்டா ஆண்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்தபடி வில்வ பழத்தை சர்பத் செஞ்சி குடிச்சா இருதய ஓட்டை அடைபடுறதோட கல்லீரல், கணையத்துல வர்ற நோய்கள் சரியாகும். வில்வ இலை, நல்லெண்ணெய், மிளகு சேர்த்து காய்ச்சின எண்ணெயை தலையில தடவி குளிச்சா ஜலதோஷம், இருமல் வராம தடுக்கும்.
இது எல்லாத்துக்கும் மேல சர்க்கரை நோயாளிகள், புற்று நோயாளிகள் தினமும் காலை ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தா நோய்கள்ல இருந்து விடுதலை கிடைக்கும்.
டிஜிட்டலுக்கு மாறும் உலகம்
இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.
Tuesday, April 15, 2014
Sunday, March 23, 2014
வெயில் காலம் வரப்போகுது அதனால அதுக்கு ஏத்த டிப்ஸ் கொடுங்கன்னு ஒருத்தர் சொன்னார். அவருக்காக மட்டுமில்லை, ஒட்டுமொத்த மக்களுக்காகவும் எழுதுறேன். படிச்சி பலன் அடையுங்க.
மே மாசம் வந்தாலே எல்லோருக்கும் கொண்டாட்டந்தான். சொந்தம் பந்தம்னு கூடிக்குலாவி இருக்குற நேரத்துல சிலபேர் ஸ்டைல் பண்றது, ஹேர்ஸ்டைல் மாத்துறதுன்னு இருப்பாங்க. இன்னும் சிலபேர் கை - கால்ல எல்லாம் மருதாணி வச்சி அழகு பார்ப்பாங்க... மருதாணி குளிர்ச்சியூட்டக்கூடியது. அதனாலதான் வெயில் காலங்கள்ல சூட்டை தணிக்கிறதுக்காக மருதாணி பூசுவாங்க. ஆனா இப்போ மருதாணி போடுறதெல்லாம் குறைஞ்சிபோய் மெகந்தி கலாச்சாரம் தலைதூக்கிட்டு. இயற்கையான மருதாணிக்கும், செயற்கை கலவையான மெகந்தியை கையில போடுறதால என்னென்னவோ பக்கவிளைவெல்லாம் வந்து மக்களை பாடாப்படுத்துறது பலபேருக்கு தெரியுறதில்லை.
மழை ஒழுங்கா பெய்யுறதில்ல, ஆனா வெயில் மட்டும் வெளுத்து வாங்குது. பருவ காலங்கள் முன்ன மாதிரி இல்லை, ஏறுக்கு மாறா... ஏட்டிக்கு போட்டியா போய்க்கிட்டு இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். வெயில் இப்பவே வறுத்தெடுக்கத் தொடங்கிட்டு. ஏற்கனவே வெயில் காலங்கள்ல அம்மை, வேர்க்குரு, கொப்புளம், வயித்துக்கடுப்பு, வயித்துவலினு வந்து பாடாப்படுத்தும். ஆனா இப்போ புதுசு புதுசா... தினுசு தினுசா நோய்கள் வந்து மனுசன ஒருவழி பண்ணிட்டு போயிருது. அறிவியல் என்னதான் வளர்ச்சி அடைஞ்சாலும் இந்த நோய்களை கண்டுபிடிக்க முடியலை. இந்த நோய்கள் வர்றதுக்கு ரெண்டே காரணந்தான். ஒண்ணு உடல் உழைப்பு குறைஞ்சு போனது, ரெண்டாவது நாம சாப்பிடுற சாப்பாடு.
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோமா?...
வறுத்தெடுக்கும் கோடை வெயில்ல இருந்து நம்மளை காத்துக்கிடணும்னா கீழே சொல்லப்பட்டிருக்கிறதல சிலதை மட்டும் பின்பற்றினாலே போதும், கைமேல் பலன்.
கோடை வர்றதுக்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துட்டு. விலை குறைவா உள்ள இந்த தர்பூசணியை சாப்பிட்டா உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கிறதோட தாகம் தணியும். என்ன ஒண்ணு அடிக்கடி சிறுநீர் போகும், அவ்வளவுதான். அதேபோல எல்லா காலத்துலயும் தாராளமா கிடைக்கக்கூடிய இளநீரை குடிக்கலாம். இதுவும் சூட்டை தணிக்கும். ஆனா என்ன... விலைதான் விர்ருன்னு தென்னைமரம் மாதிரி ஏறிப்போச்சு.
இளநீர் குடிக்கிறதுல தப்பில்லை, கடைக்குப்போனா எளநி வியாபாரி, ‘வழுக்கையா, தண்ணியா’ன்னு கேப்பாரு. சிலபேரு வழுக்கையா பாத்து போடுங்கன்னு வாங்கி ‘மடக் மடக்’குனு குடிப்போம். லேசான வழுக்கை ருசியாத்தான் இருக்கும். ஆனா இப்பிடி தொடர்ந்து வழுக்கையா வாங்கி சாப்பிட்டா காலப்போக்குல அது பசியைக்குறைச்சி குன்மம்னு சொல்லக்கூடிய வயித்து நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எப்பவுமே புதுசா பறிச்ச இளநீரை வாங்கி குடிச்சா உடம்புக்கு நல்லது, அதாவது வெறும் தண்ணியா உள்ள இளநீரா பார்த்து வாங்கி குடிங்க. கூல் கூல்..!
வெயில் காலத்துல வீட்டுக்கு வீடு மண்பானையில தண்ணி ஊத்தி வச்சி குடிப்போம், நல்லதுதான். சும்மா வெறுமனே தண்ணியை ஊத்தாம காய்ச்சி ஆற வச்ச தண்ணியை மண்பானையில ஊத்தி வச்சி குடிக்கலாம். தண்ணியை ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். தண்ணி கொதிக்கும்போது கொஞ்சம் சீரகத்தை அள்ளிப்போடுங்க. உடம்புக்கு குளிர்ச்சி தர்றதோட உள்உறுப்புகள் சரியாகும். மண்பானையில வெட்டிவேரை ஊறப்போட்டு குடிச்சாலும் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது நாட்டு மருந்துக்கடைகள்ல கிடைக்கும். ஜன்னல் ஓரங்கள்ல வெட்டிவேர்ல செஞ்ச தட்டியை பயன்படுத்தினா குளிர்ச்சியான காத்து கிடைக்குறதோட நல்ல வாசமா இருக்கும்.
வெட்டிவேர் மாதிரியே நன்னாரி வேரும் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதை வாங்கி இடிச்சி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி சூடு ஆறுன உடனே சீனி (சர்க்கரை) சேர்த்து குடிச்சா ஒண்ணுக்கு போகும்போது வரக்கூடிய எரிச்சல் சரியாகும். கடைகள்ல விற்கக்கூடிய நன்னாரி சர்பத் குடிக்க டேஸ்டா இருக்கலாம், ஆனா சுகம் கிடைக்காது. இது எந்தவித கலப்பு இல்லாத சூப்பர் சர்பத்.
கோடை காலத்துல புழுக்கம் வர்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிலபேருக்கு எரிச்சல், கோபம், படபடப்பு, குழப்பம் வரும். சிலபேருக்கு தலைசுத்தலும், மயக்கமும் வரும். இந்த மாதிரி பிரச்னை வந்தா செம்பருத்திப்பூ சர்பத் குடிச்சா நல்லது. அதென்ன செம்பருத்தி பூ சர்பத்துன்னு கேக்குறீங்களா? எங்க ஊர்ப்பக்கம் தடியங்காய்னு சொல்வாங்க, அதோட பேரு கல்யாணபூசணிக்காய். திருஷ்டிக்கு உடைப்பாங்களே, அதே காய்தான். அதுல ஒரு ஓட்டை போட்டு 50 இல்லைனா 100 செம்பருத்திபூவை உள்ள திணிச்சி மூடி வச்சிரணும். மறுநாள் அதை உடைச்சி சதை பகுதியை எடுத்து சாறு பிழிஞ்சி சம அளவு சீனி (சர்க்கரை) சேர்த்து தேன் பதத்துல காய்ச்சி ஆற வச்சா செம்பருத்தி பூ சர்பத் ரெடி. இதுல 4 ஸ்பூன் சர்பத் 4 ஸ்பூன் தண்ணி சேர்த்து குடிச்சா படபடப்புல தொடங்கி ஆயாசம், கண் எரிச்சல்னு எல்லாம் ஓடிப்போயிரும்.
இதுபோக வெயில் காலத்துல கிடைக்கக்கூடிய நொங்கு (பனைநுங்கு), எலுமிச்சை ஜூஸ் சாப்பிடறதால பிரச்னைகள்ல இருந்து தப்பிக்கலாம். எலுமிச்சை ஜூஸை தண்ணி, சீனி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து குடிங்க. அதிகமா புளிப்பு இருந்தா அமிலம் இருக்குன்னு அர்த்தம். அது உடம்புக்கு அவ்வளவு நல்லதில்லை. மத்தபடி வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், பானகம் குடிக்கலாம். பானகம் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேருக்கு தெரியாது.
புளியை தண்ணியில ஊறப்போடுங்க. ஊறின தண்ணியோட கொஞ்சம் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து கரைச்சி குடியுங்க. வயித்துக்கடுப்பு, சொட்டு மூத்திரம்னு அது தொடர்பான எல்லா கோளாறுகளும் சரியாயிரும். சூடும் தணியும். அந்த காலத்துல சனிக்கிழமையானா எண்ணெய் தேய்ச்சி குளிப்பாங்க. இப்போ அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரை குளிரக்குளிர நல்லெண்ணெய் தேய்ச்சிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சி பாருங்க, அப்பிடியே சொர்க்க லோகம் தெரியும்.
மத்தபடி, முளைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, வல்லாரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, கானாம்வாழை மாதிரி கீரைகளை உணவுல சேர்த்துக்கிட்டா சூடு தணியுறதோட வேற சில கோளாறுகளும் சரியாகும். கத்தாழை ஜூஸ், வெண்டைக்காய் பொரியல், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய்னு ஏகப்பட்ட காய்கறிகள் இருக்கு, அதையெல்லாம் சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டீங்கன்னா வெயில் நம்மை நெருங்காது. முக்கியமா இந்த வெயில் காலத்துலதான் அம்மை நோய் வரும். நோய் வர்றதுக்கு முன்பே உங்களை காத்துக்கிடணும்னா முத்தின கத்தரிக்காயை வாங்கிட்டு வந்து தீயில சுட்டு மிளகாய்வத்தலையும் (காய்ந்த மிளகாய்) சுட்டு, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நல்லா பிசைஞ்சு சாப்பிடுங்க. நோய் எட்டிப்பாக்காது.
Saturday, March 15, 2014
Tuesday, March 4, 2014
கறிவேப்பிலை, கருவேப்பிலை... இது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். நம்ம வீடுகள்ல சமையல்ல கட்டாயம் கறிவேப்பிலை இருக்கும். ஆனா சாப்பிட உக்காந்த உடனே முதல் வேலையா கறிவேப்பிலையை தூக்கி தூர வச்சிட்டுதான் சாப்பிடுவோம். கறிவேப்பிலையில எவ்வளவு உயிர்ச்சத்து இருக்குங்கறது நமக்கு தெரியாது. வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாம சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கு. கறிவேப்பிலையை துவையல் செஞ்சி சூடான சாதத்தோட சேர்த்து முதல் கவளத்தோட தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புக்கு பலம் கிடைக்கும். புது ரத்தம் ஊறும். பல்லும், எலும்பும் உறுதியாகும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராது.
துவையல் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேர் கேக்குறாங்க. அப்பிடிப்பட்டவங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ். கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கோங்க. கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, புளி எல்லாத்தையும் பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கி சூடு ஆறினதும் உப்பு சேர்த்து அம்மியில வச்சி மையா அரைச்சி சாப்பிட்டா அதோட பலனே தனிதான். ஒருநாள் ராத்திரி துவையல் சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் தாராளமா போறதோட வாயுத்தொல்லையும் விலகிப்போயிரும்.
இப்போவெல்லாம் காய்ச்சல் வந்து மக்களை பாடாப்படுத்துது. காய்ச்சலுக்கு புதுசு புதுசா பேரு வைக்கிறாங்க. அப்பிடி வரக்கூடிய காய்ச்சல்கை-கால்ல வலியை உண்டாக்குறதோட முடக்குவாதம் மாதிரி வந்து ஒரு வழி பண்ணுது. எது எப்பிடியோ எந்த மாதிரியான காய்ச்சல் வந்தாலும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுங்க, கொஞ்சம் சீரகம், அளவுல குறைச்சலா மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையா அரைச்சி எடுங்க. அதோட கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடணும். கட்டியா இருக்குறதால கொஞ்சம் வெந்நீர் சேர்த்து குடிக்கலாம். காலையிலயும், சாயங்காலமுமா மூணு நாள் இதே மாதிரி சாப்பிட்டு வந்தா காய்ச்சல் வந்த இடம் பார்த்து போயிரும்.
பித்தத்தால் புத்தி மாறாட்டம் வந்தவங்களுக்கு கறிவேப்பிலையை துவையலா அரைச்சி எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தோட சேர்த்து சாப்பிட்டா பைத்தியம் தெளிஞ்சிரும். இப்பிடி கறிவேப்பிலையால பல பலன்கள் இருக்கு.
Photo: காய்ச்சலை துரத்தும் கறிவேப்பிலை!
கறிவேப்பிலை, கருவேப்பிலை... இது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். நம்ம வீடுகள்ல சமையல்ல கட்டாயம் கறிவேப்பிலை இருக்கும். ஆனா சாப்பிட உக்காந்த உடனே முதல் வேலையா கறிவேப்பிலையை தூக்கி தூர வச்சிட்டுதான் சாப்பிடுவோம். கறிவேப்பிலையில எவ்வளவு உயிர்ச்சத்து இருக்குங்கறது நமக்கு தெரியாது. வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாம சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கு. கறிவேப்பிலையை துவையல் செஞ்சி சூடான சாதத்தோட சேர்த்து முதல் கவளத்தோட தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புக்கு பலம் கிடைக்கும். புது ரத்தம் ஊறும். பல்லும், எலும்பும் உறுதியாகும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராது.
துவையல் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேர் கேக்குறாங்க. அப்பிடிப்பட்டவங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ். கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கோங்க. கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, புளி எல்லாத்தையும் பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கி சூடு ஆறினதும் உப்பு சேர்த்து அம்மியில வச்சி மையா அரைச்சி சாப்பிட்டா அதோட பலனே தனிதான். ஒருநாள் ராத்திரி துவையல் சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் தாராளமா போறதோட வாயுத்தொல்லையும் விலகிப்போயிரும்.
இப்போவெல்லாம் காய்ச்சல் வந்து மக்களை பாடாப்படுத்துது. காய்ச்சலுக்கு புதுசு புதுசா பேரு வைக்கிறாங்க. அப்பிடி வரக்கூடிய காய்ச்சல் கை-கால்ல வலியை உண்டாக்குறதோட முடக்குவாதம் மாதிரி வந்து ஒரு வழி பண்ணுது. எது எப்பிடியோ எந்த மாதிரியான காய்ச்சல் வந்தாலும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுங்க, கொஞ்சம் சீரகம், அளவுல குறைச்சலா மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையா அரைச்சி எடுங்க. அதோட கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடணும். கட்டியா இருக்குறதால கொஞ்சம் வெந்நீர் சேர்த்து குடிக்கலாம். காலையிலயும், சாயங்காலமுமா மூணு நாள் இதே மாதிரி சாப்பிட்டு வந்தா காய்ச்சல் வந்த இடம் பார்த்து போயிரும்.
பித்தத்தால் புத்தி மாறாட்டம் வந்தவங்களுக்கு கறிவேப்பிலையை துவையலா அரைச்சி எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தோட சேர்த்து சாப்பிட்டா பைத்தியம் தெளிஞ்சிரும். இப்பிடி கறிவேப்பிலையால பல பலன்கள் இருக்கு.
Thursday, February 27, 2014
Friday, February 21, 2014
Thursday, February 6, 2014
ஆண்களுக்கு கைகொடுக்கும் முருங்கை!
கிராமப்புறங்கள்ல வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருக்கும். ஆனா அந்த மரத்துல வேர் முதல் பூ வரை எல்லாத்திலயும் மருத்துவக்குணங்கள் இருக்குங்கிறது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க... சரி நான் நேராவே விஷயத்துக்கு வாரேன். இன்னைக்கி சூழல்ல ஆண்மைக்குறை, நரம்புத்தளர்ச்சி, விந்துக்குறைபாடுகளால குழந்தை இல்லாம மனசு புழுங்கி கிடக்கிறாங்க. இதுக்கெல்லாம் இன்னைக்கு உள்ள சாப்பாடும், சுற்றுச்சூழலும் ஒரு காரணமா இருந்தாலும் தங்களோட பிரச்சினைகளை தீர்க்குறதுக்காக கோயில், குளம்னு அலையுறதோட சித்த வைத்தியத்துல தொடங்கி அலோபதி வரைக்கும் மக்கள் போய் பார்த்துட்டு வர்றாங்க. இதுல சில பேருக்கு வெற்றி கிடைக்கு, பல பேருக்கு தோல்வி மேல் தோல்விதான். அப்படிப்பட்டவங்க கண்ணை மூடிக்கிட்டு என்னை நம்புறதைவிட முருங்கையை நம்புங்க, உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி 100 மில்லி பாலோட 100 மில்லி தண்ணி சேர்த்து கூடவே ஒரு கைப்பிடி முருங்கைப்பூவும் போட்டு பாதியா வத்துற அளவுக்கு நல்லா காய்ச்சி சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. இப்பிடி ஒரு மாசம் சாப்பிட்டு பாருங்க, கைமேல பலன் கிடைக்கும். அதேபோல முருங்கைப்பிசினை தண்ணியில ஊறப்போட்டு காலையில எழுந்திரிச்சதும் நல்லா கரைச்சி குடிக்கணும். அதேமாதிரி அடிக்கடி வீட்டுல முருங்கைக்கீரை பொரியல், துவட்டல் செஞ்சி சாப்பிடுங்க. முருங்கைப்பூவையும் இப்பிடி செஞ்சி சாப்பிடலாம். இது எல்லாத்துக்கும் மேலா முருங்கைக்காயை பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே நம்ம பாக்கியராஜ் சார் முந்தானை முடிச்சு படத்துல முருங்கைக்காயை பத்தி நல்லாவே சொல்லியிருக்காரு. அதனால அடிக்கடி முருங்கைக்காயை குழம்பு, சாம்பார், கூட்டு செஞ்சி சாப்பிடுங்க. அதுலயும் முக்கியமா முருங்கைக்காய்ல இளம் பிஞ்சு காயை பால்ல வேக வச்சி சாப்பிடுங்க. இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம், முருங்கையை பத்தி..! ஆக ஒட்டு மொத்தமா முருங்கையை நம்பினா ஆம்பிளைங்களுக்கு கொண்டாட்டம்தான் போங்க... இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.
Sunday, February 2, 2014
ஹார்ஸ் பவர் தரும் கேரட்!
குதிரைக்கு மிக முக்கிய உணவாக புல்லும், கொள்ளும், கேரட்டும் கொடுக்கப்படுகிறது. குதிரையின் சக்தியை ‘ஹார்ஸ் பவர்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம். கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும். டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.
குடல் நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் நோய்களுக்கும் கேரட் நல்லது. மேலும் மலட்டுத்தன்மையை போக்கக்கூடியது. புற்றுநோய் செல்களை ரத்தத்தில் வாழ விடாமல் செய்யக்கூடியது. அதுமட்டுமல்ல புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது கேரட். கண் பார்வைக்கும் மிக நல்லது. எனவே அவ்வப்போது கேரட் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
கேரட்டை துருவிப்போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்புடன் தயிர் சேர்த்து பச்சடியாக சாப்பிடலாம். தயிர் சேர்த்த இந்த பச்சடியை கோழி, ஆடு போன்றவற்றின் உணவுகளை சாப்பிடும்போது சாப்பிடக்கூடாது. பலர் ருசிக்காக இப்படித்தான் சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வெள்ளை விழுதல் என்று சொல்லக்கூடிய வெண் தேமல், வெண்குஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Friday, January 31, 2014
பாம்பை விரட்டும் சிறியாநங்கை
சிறியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு... நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata. அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.
நெல்லிக்காய்...!
நெல்லிக்காய்...! இது அரைநெல்லி. இதற்கும் மருத்துவ குணம் உள்ளது.
பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அரைநெல்லி நாவிற்கு ருசியை தருவதோடு அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான ரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கும் மூலிகைதான் அரைநெல்லி. அரைநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இது நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.