எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, February 6, 2014

ஆண்களுக்கு கைகொடுக்கும் முருங்கை! கிராமப்புறங்கள்ல வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருக்கும். ஆனா அந்த மரத்துல வேர் முதல் பூ வரை எல்லாத்திலயும் மருத்துவக்குணங்கள் இருக்குங்கிறது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க... சரி நான் நேராவே விஷயத்துக்கு வாரேன். இன்னைக்கி சூழல்ல ஆண்மைக்குறை, நரம்புத்தளர்ச்சி, விந்துக்குறைபாடுகளால குழந்தை இல்லாம மனசு புழுங்கி கிடக்கிறாங்க. இதுக்கெல்லாம் இன்னைக்கு உள்ள சாப்பாடும், சுற்றுச்சூழலும் ஒரு காரணமா இருந்தாலும் தங்களோட பிரச்சினைகளை தீர்க்குறதுக்காக கோயில், குளம்னு அலையுறதோட சித்த வைத்தியத்துல தொடங்கி அலோபதி வரைக்கும் மக்கள் போய் பார்த்துட்டு வர்றாங்க. இதுல சில பேருக்கு வெற்றி கிடைக்கு, பல பேருக்கு தோல்வி மேல் தோல்விதான். அப்படிப்பட்டவங்க கண்ணை மூடிக்கிட்டு என்னை நம்புறதைவிட முருங்கையை நம்புங்க, உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி 100 மில்லி பாலோட 100 மில்லி தண்ணி சேர்த்து கூடவே ஒரு கைப்பிடி முருங்கைப்பூவும் போட்டு பாதியா வத்துற அளவுக்கு நல்லா காய்ச்சி சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. இப்பிடி ஒரு மாசம் சாப்பிட்டு பாருங்க, கைமேல பலன் கிடைக்கும். அதேபோல முருங்கைப்பிசினை தண்ணியில ஊறப்போட்டு காலையில எழுந்திரிச்சதும் நல்லா கரைச்சி குடிக்கணும். அதேமாதிரி அடிக்கடி வீட்டுல முருங்கைக்கீரை பொரியல், துவட்டல் செஞ்சி சாப்பிடுங்க. முருங்கைப்பூவையும் இப்பிடி செஞ்சி சாப்பிடலாம். இது எல்லாத்துக்கும் மேலா முருங்கைக்காயை பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே நம்ம பாக்கியராஜ் சார் முந்தானை முடிச்சு படத்துல முருங்கைக்காயை பத்தி நல்லாவே சொல்லியிருக்காரு. அதனால அடிக்கடி முருங்கைக்காயை குழம்பு, சாம்பார், கூட்டு செஞ்சி சாப்பிடுங்க. அதுலயும் முக்கியமா முருங்கைக்காய்ல இளம் பிஞ்சு காயை பால்ல வேக வச்சி சாப்பிடுங்க. இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம், முருங்கையை பத்தி..! ஆக ஒட்டு மொத்தமா முருங்கையை நம்பினா ஆம்பிளைங்களுக்கு கொண்டாட்டம்தான் போங்க... இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.

0 comments :

Post a Comment