எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, January 6, 2011

கால் ஆணி குணமானது!

சைனஸ், பொடுகு தொல்லைகள் பற்றி எழுதியிருந்தேன். அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்திருக்குமென்று தெரியவில்லை. மேல் விவரங்களுக்கும், சந்தேகங்களுக்கும் என்னை தொடர்பு கொள்ளலாம். செல்: 9551486617.
இன்று வேறொரு குறைபாட்டையும், அதற்கு நான் எடுத்துக்கொண்ட வைத்தியம் பற்றியும் சொல்கிறேன். கால் ஆணி என்பார்கள். இது வருவதற்கு காரணங்கள் பல உண்டு. இத்தகைய குறைபாடு வந்தால் கிராமப்புறங்களில் ஏதேதோ வைத்தியம் செய்வார்கள். அது படுபயங்கரமாக இருக்கும். என் அப்பாவுக்கு இந்த குறைபாடு வந்தவுடன் பிளேடால் அந்த இடத்தை வெட்டி எடுப்பார். அந்த கையோடு பிளேடால் வெட்டிய அந்த இடத்தில் கருப்பட்டியை (பனைவெல்லம்) வைத்து தீ பற்ற  வைப்பார். அப்போது உயிர் போகுமளவு வலி எடுக்குமாம். இதை பார்க்கும் எனக்கே பயமாக இருக்கும். இதுபோன்ற முரட்டு வைத்தியம் வேண்டாம். எளிய, சுகமான ஒரு வைத்தியம் சொல்கிறேன், கேளுங்கள். இது நானே செய்து பார்த்து, பலனடைந்த‌ வைத்தியமும்கூட‌
அம்மான்பச்சரிசி என்று ஒரு மூலிகை. இது நாம் வசிக்கும் பகுதிகளில் தானாக வளரக்கூடியது. பச்சரிசி போன்ற சுவையுடையது. இதன் தண்டுப்பகுதியை உடைத்தால் பால் வரும். அந்த பாலை கால் ஆணி உள்ள இடத்தில் தடவ வேண்டும். தொடர்ந்து 20 நாட்கள் செய்தேன், கைமேல் பலன் கிடைத்தது. நீங்களும் செய்து பாருங்க. பலனை அனுபவியுங்க. பைசா செலவில்லாமல் எளிய வைத்தியம். இதுமாதிரி வைத்தியங்கள் நிறைய இருக்கிறது.

0 comments :

Post a Comment