எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Saturday, January 29, 2011

நற்பணி தொடர வேண்டும்!

ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும்னு ஆசை. நான் ஊர்ல இருக்கும்போது 'மக்கள் நலக்குழு' னு ஒரு அமைப்பை தொடங்கினேன். இதுக்கு தலைவர், செயலாளர்னு எந்த பொறுப்பும் கிடையாது. அமைப்பாளரா நான் இருந்தேன். ஏன்னா ஒருங்கிணைக்கிறதுக்கு ஒரு ஆள் வேணுமே, அதனால்தான். கல்லூரிப்படிப்பை முடிச்சிட்டு ஊர்ல இருக்கும்போது தொடங்கினேன். இதுல இருந்தவங்கள்ல எல்லாருமே பத்து, பனிரெண்டு படிச்சிட்டிருந்த ஸ்டூடன்ட்ஸ்தான். எங்களோட வேலை எல்லாமே லீவு நாள்லதான் நடக்கும். என்ன வேலைன்னா... எங்க ஊர்ல வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஓடுது. அதுக்கு போற வழி ரொம்ப மோசமா இருக்கும். (இப்ப ரோடு போட்டுட்டாங்க). மழை நேரத்துல பள்ளமும் மேடுமா இருக்கும், அதில சகதி நிறைஞ்சு கிடக்கும். அதுமட்டுமில்லாம முள் செடி வழியை மறைச்சி கிடக்கும். இதையெல்லாம் சரி பண்றதுதான் எங்களோட வேலை. பிறகு ரோட்டோரமா மரக்கன்றுகளை நடுவோம். மரக்கன்றுகள் எல்லாமே பஞ்சாயத்து யூனியன்ல இலவசமாவே கிடைக்கும். அதை வாங்கிட்டு வந்து நடுவோம். வெயில் நேரத்துல தண்ணீர் பந்தல் வைப்போம். தெருவிளக்கு எரியலைன்னா பஞ்சாயத்து ஆபீஸ்ல போய் சொல்வோம், மறுநாளே லைட் எரியும். தெருநாடகங்கள் போடுவோம். அறிவொளி இயக்கத்துல சேர்ந்து ஊர் ஊரா போய் நாடகங்கள் போட்டோம். இதனால‌ மக்கள் மத்தியில நல்ல பெயர் எடுத்தோம்.  ஆனாலும் சிலர் இதைக்கண்டு பொறுக்காமல் விமர்சித்தனர். அதேநேரத்தில் அரசியல்வாதிகள் சிலர் எங்களோடு நெருங்கி பழக தொடங்கினர். தங்களுக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். நல்லதொரு அமைப்பாக உருவாக்கும் திட்டம் இருந்தது. ஆனால் காலச்சூழல் அதன்பிறகு படிப்பு, வேலை என்று எங்களை திசைக்கு ஒரு பக்கமாக அனுப்பிவிட்டது. ஆனாலும் மனதில் ஏக்கம் நிறைந்திருக்கிறது. என்றைக்காவது ஒருநாள் விட்ட பணியை தொடர வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது. நேரம் காலம் வாய்க்கும்போது பணியை தொடர வேண்டும். நல்ல உள்ளங்களின் ஆதரவு தேவை. எதிர்பார்ப்புடன்...    

0 comments :

Post a Comment