எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Tuesday, January 11, 2011

வாயை மூடிய அதிகாரம்!

10.1.11 திங்கட்கிழமை எனக்கு நடந்த ஒரு நிகழ்வு. அதிகாரம் இருந்தால்தான் இந்த உலகில் பிழைக்கமுடியும் என்பதற்கு இந்த நிகழ்வை ஒரு சாட்சியாக நினைக்கிறேன். இந்த விஷயத்தில் என்மீது தவறு இருந்தால் என்னை மன்னித்தருள்க!
பெரம்பூர் ரெயில்நிலைத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் பாதை எப்போதும் நெரிசல் நிறைந்ததாகவே இருக்கும்.நான் வேலை முடிந்து வீட்டுக்கு செல்லும் வழி இதுதான். நேற்று செல்லும்போது அந்த சாலையில் உள்ள‌ நாட்டு மருந்துக்கடையில் சில பொருட்கள் வாங்குவதற்காக எனது டூ வீலரை நிறுத்தினேன். அப்போது அந்தக்கடையின் முன்புறம் (சாலையோரம்) கடை விரித்திருந்த காய்கறி வியாபாரி,' உள்ள போ, உள்ள போ...' என்று சத்தம் போட்டார். பக்கத்தில் மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான் வண்டியை விட்டு இறங்குவதற்குள் அவர் போட்ட சத்தம் என்னை எரிச்சல்படுத்தியது. வண்டியை விட்டு இறங்குறதுக்குள்ள சத்தம் போடுறீங்களே... இருங்க நான் ஓரமா நிறுத்துறேன் என்று நான் சொல்ல, அவர் அதை கண்டுகொள்ளாமல் வாய்க்கு வந்தபடி பேசினார். நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன், முடியவில்லை. ஹலோ நான் சாமான் வாங்குற கடை இதுதான், இங்கதான் வண்டியை நிறுத்துவேன் என்றேன். அவர் அதிகமாக பேசவே, பக்கத்தில் போய் நீ சொல்றத‌ கேட்டுட்டு போறதுக்கு நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்ல, நான் பத்திரிக்கைகாரன் என்றேன். அவ்வளவுதான் 'கப்சிப்' என்று அவர் பேச்சை நிறுத்திவிட்டார். நான் ஏன் அப்ப‌டி சொன்னேன்னா, இதேபோல பலதடவை வண்டியை நிறுத்தும்போது அந்த ஆள் சத்தம் போட்டிருக்கிறார் என்பதால் என் பொறுமை எல்லை மீறிவிட்டது.
இங்கே நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால், சாமானியன் என்றால் அவனை தரங்கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்து விடுவார்களாம். இதை அந்த நாட்டு மருந்து கடைக்காரரே சொன்னார். 'இது என்னங்க இங்க வ‌ண்டி நிறுத்துறவங்கள இவனுங்க கேக்குற கேள்வியால அவமானப்பட்டு போறாங்க' என்றார். அதாவது சட்டத்துக்கு புறம்பாக அவர் கடை விரித்திருப்பதோடு என்னை தேவையில்லாமல் சத்தம் போட்டதுதான் எரிச்சலூட்டியது. அதுமட்டுமல்ல அந்த மார்க்கெட்டின் உள்ளே வெட்டியாக நின்று கொண்டிருந்த ரெண்டு பெருசுகளும் அவருக்கு துணையாக வந்தார்கள். அவர்களிடம், எனக்கும் இவருக்கும்தான் பேச்சு, இதுல தலையிட நீங்க யாருனு கேட்டேன். யார்யாரெல்லாமோ பேச வந்துட்டாங்க என்றேன் (இந்த வார்த்தையைத்தான் பேசினேன், ஏனென்றால் அவர்கள் சுமார் 60 வயதுக்குட்பட்டவ‌ர்கள்) உடனே ஒருவர் நான்என்ன உங்க வீட்டுல மாடு மேய்க்கிறவனா? என்று சம்பந்தமில்லாமல் பேசினார். அதன்பிறகு அவர்களாகவே பேச்சை குறைத்துக்கொண்டார்கள். வாய் உள்ள பிள்ளைதான் பொழைக்கும் என்பார்கள், அதோடு அதிகாரமா பேச முடிந்ததால்தான் நான் அவர்களிடமிருந்து தப்ப முடிந்தது, சாமானியர்களை அவர்கள் உண்டு இல்லைனு ஆக்கிடுவாங்கனு கேட்டபோது மனசுக்கு கஷ்டமா இருந்திச்சி. இந்த தேசத்துல, நம்ம தமிழகத்துல இதுமாதிரி நிலைமைகள் நீடிக்க விடக்கூடாது.

0 comments :

Post a Comment