எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Wednesday, January 5, 2011

எனது அனுபவம்

மனிதம் புனிதமானது. கிடைத்தற்கரிய ஒரு பிறவி மனிதப்பிறவி. இப்படி ஏதேதோ சொல்வார்கள். இது அவரவர் விருப்பம். ஆனால் மானிடனாய் பிறந்த நாம் இப்புவியில் வாழும் காலத்தில் என்ன செய்கிறோம், மற்றவர்க்கோ மானிடரல்லாத ஏனைய பிறவிகளுக்கோ நம்மால் முடியுமட்டும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். அதை இன்றளவும் நான் கடைபிடித்தும் வருகிறேன். பொருளாதாரம் மிக முக்கியம் என்பதால் சில பணிகள் தடைபட்டுக்கொண்டே வருகின்றன. இருந்தாலும் நிச்சயம் எனது லட்சியம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு எனது பணியை தொடர்கிறேன்.

முதலில் நான் சொல்ல விரும்புவது யாதெனில்,இன்றைய சூழல் மிகவும் கேடு கெட்டுப்போய் கிடக்கிறது. சூழல் என்னும்போது நிறையவே சூழல்கள் உள்ளன. எல்லா சூழல்களையும் பின்வரும் நாட்களில் பார்க்கலாம். இங்கே நான் சொல்ல வரும் சூழல் சுற்றுப்புறச்சூழல், அதாவது புவியியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.  இதன் காரணமாக புதிது புதிதாக நோய்கள். ஏற்கனவே இருக்கும் சில நோய்களுக்கே (ஆங்கில) மருந்து கண்டுபிடிக்கப்படாத‌ சூழலில் இன்றைய புதிய வரவுகள் மக்களை பாடாய்ப்ப‌டுத்தி வருகின்றன. என்ன செய்ய? என்ன சொல்ல? என்று எல்லோருமே கையைப்பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் எனது அனுபவத்தில் ஒன்றை மட்டும் சொல்ல முடியும். நோய் வரும்முன் காப்பதே சிறந்த வழி. வந்துவிட்டாலும் மூலிகைகளின் துணையோடுஅவற்றை எதிர்கொள்ள முடியும். ஆனால் சில போலி டாக்டர்களைப்போல அதை குணப்படுத்திவிட முடியும், இதை குணப்படுத்திவிட முடியும் என்று நான் சொல்லப்போவதில்லை.
இவை எல்லாமே என் அனுபவத்தில் நான் செய்து பார்த்தவை, என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கு கொடுத்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன்.

10 வருடங்களுக்கு முன் நான் இதே சென்னையில் தங்கியிருந்து எனது பணியை செய்து கொண்டிருந்தேன். அப்போது சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய வேளை. நான் தங்கியிருந்த இடத்தில் ஏராளமானோர் இருந்தோம். இதனால் தண்ணீர் தேவை அதிகமாக இருந்தது. நீர் இறைக்கும் மோட்டார் ஓடிக்கொண்டே இருக்கும்.  ஆனால் நேரம் ஆக ஆக தண்ணீரின் நிறம் மாறி விடும். செம்மண் கலந்த நீர் வரும். நாங்களும் வேறு வழியில்லாமல் குளிப்போம். நாளடைவில் எனக்கு பொடுகுப்பிரச்சினை வந்துவிட்டது. கூடவே சைனஸ் தொல்லையும் தொற்றிக்கொண்டது. டாக்டரைப்போய் பார்த்தால் சைனஸ்தான், வேற வழியே இல்லை, ஆபரேஷன்தான் இதுக்கு வழி என்றார்.
சரி முதல்ல பொடுகை விரட்டுவோம்னு ஹெட் அன்ட் ஷோல்டர் ஷாம்பு முதல் டாக்டர்கள் சொன்ன மருந்துகளையெல்லாம் போட்டுப்பார்த்தேன். எந்த பிரயோஜனமும் இல்லை. அப்பதான் எனக்கும் மூலிகைகள்மேல் ஆர்வம் வந்தது. ஏற்கனவே நான் பிறந்த ஊர் கிராமம் என்பதால் வீட்டைச்சுற்றி வளரும் சில மூலிகைகளையும், அவற்றின் குணநலன்களையும் ‌நான் தெரிந்து வைத்திருந்தேன். அது இப்போது எனக்கு கைகொடுத்தது. இதன் காரணமாக எனக்கு நானே செய்து கொண்ட வைத்தியம் பொடுகு மற்றும் சைனஸ் தொல்லைக்காக... இதில் எனக்கு நல்ல வெற்றி கிடைத்தது. என்னென்ன‌ சிகிச்சை மேற்கொண்டேன்,  எப்படி குணமாயிற்று என்ற விவரங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.

0 comments :

Post a Comment