எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, January 20, 2011

வாகன ஓட்டிகளே கொஞ்சம் யோசிங்க!

20.01.2011 காலை சுமார் 9.30 மணி இருக்கும். நான் வசிக்கும் மாதவரம் பகுதியில் இருந்து மூலக்கடை வழியாக அலுவலகம் சென்று கொண்டிருந்தேன். மூலக்கடைக்கு முன்னால் சில அடி தூரத்தில்.... குட்டியானை என்று சொல்லப்படும் டாடா ஏஸ் வாகனம் பிரேக் போட்டதால் பின்னால் சென்ற ஆட்டோ மோதி (ஆட்டோவின்) முன்புறம் பழுதானதோடு டிரைவருக்கு காலில் அடி. அதற்கு பின்னால் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணும் மோதி அவருக்கும் காலில் காயம்.  ஆட்டோ டிரைவர் சின்னக்குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார். காலில் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்க‌லாம் என்ற பயம் அவருக்கு. இங்கே யாரை குற்றம் சொல்லவென்று தெரியவில்லை.
இன்றைய அவசர யுகத்தில் எல்லாமே அவசரம்தான். அதுவும் வாகன ஓட்டிகளை கேட்கவே வேண்டாம். அத்துதான் கழுதை எடுத்ததாம் ஓட்டம்னு கிராமத்துல சொல்வாங்க. அதுமாதிரி அவனவன் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடுறான். அதுவும் சென்னை மாதிரி நகரங்களில் கேட்கவே வேண்டாம். யாரையும், எந்த விதிகளையும் எவரும் மதிப்பதில்லை. சிக்னலில் பச்சை விளக்கு எரிவதற்காக காத்திருக்கும்வேளையில் மஞ்சள் விளக்கு எரிவதற்குள்ளாக பின்னால் நிற்பவர்கள் 'பீய்ங்... பீய்ங்...'  என்று ஹாரன் எழுப்புகின்றனர். அந்தவேளையில், 'எங்கதான் போறானுங்களோ... சனியன் புடுச்சவனுங்க...' என்று பெரியவர்கள் முணுமுணுக்க தவறுவதில்லை. ரோட்டுல போய்க்கிட்டு இருக்கும்போதே 'ஓவர்டேக்' செய்கிறவர்கள் ஏராளம். அப்போது பலரை நிலைகுலைய செய்துவிட்டு செல்கிறார்கள். குதிரைத்திறன் குறைந்தவர்கள் முன்னால் சென்றால் போதும் பெரிய வண்டிகள் வைத்திருப்போருக்கு ஏதோ அவமரியாதை ஏற்பட்டுவிட்டதுபோல சர்ரென்று முந்திச்செல்கிறார்கள். இதில் இளைஞர்கள் மட்டுமல்ல, தலைநரைத்தவர் முதல் மீசை முளைக்காதது, ஆம்பிளைக்கு போட்டியா பொம்பளைன்னு எல்லோருமே ஏகத்துக்கு வண்டி ஓட்டுறாங்க. மற்றவர்களைப்பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் சர்...புர்ன்னு போறாங்க.  அரக்க பரக்க, அவசர அவசரமா போய் வாழ்க்கையும் அவசரமா முடிஞ்சுபோகுது. ஆமாங்க வயித்தெரிச்சல் இருக்காதா? என்ன..? சென்னையில் கடந்த ஆண்டு சாலைவிபத்தில் இறந்தவர்களில் இளைஞர்களே அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. படிச்சா மட்டும் போதாதுங்க.... கொஞ்சமாவது பொது அறிவு வேணும், மத்தவங்களோட உணர்ச்சிகளை புரிஞ்சிக்கணும், உயிர்மேல கொஞ்சமாவது பயம் வேணும். கொஞ்சம் யோசிங்கப்பா... பெத்தவங்க, பொண்டாட்டி புள்ளைங்க வீட்டுல காத்திட்டு இருக்காங்க...

0 comments :

Post a Comment