எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Friday, January 28, 2011

விடுதலை! விடுதலை! மூட்டுவலிக்கு விடுதலை!

சில நாளா எதுவுமே எழுதறது இல்லை. நேரமில்லைனு ரொம்ப சிம்பிளா சொல்லிட்டு போயிற‌லாம். ஆனாலும் அதுல உடன்பாடில்லை. வைத்திய தகவல்கள் சொல்லி கொஞ்சநாள் ஆகிட்டு. பெரியவர் ஒருத்தர் மூட்டுவலின்னு வந்தார். ரொம்பநாளாவே விசாரிச்சிட்டு இருந்திருக்கார். அவருக்கு நேரமில்லையாம். குடியரசு தினத்துக்கு முந்தினநாள்தான் எங்கவீட்டுக்கு வந்திருக்கார். மறுநாள் அவருக்கு ஒரு எண்ணெய் தயார் பண்ணி குடுத்தேன். கூடவே பச்சிலை ஒன்றை மூட்டுவலி உள்ள இடத்தில் 3 நாட்கள்தான் பூசி விட்டேன். 4 வருஷமா இருந்த வலி மூணே நாள்ல குறைஞ்சிருக்குனு சொன்னார். வலி வரும்போதெல்லாம் டாக்டர்கிட்ட போய் ஊசி போட்டுட்டு வருவாராம். மனுஷனுக்கு இப்பதான் நிம்மதியாம். அந்த மூட்டுவலியால‌ அவர் என்ன பாடுபட்டிருப்பார். வைத்தியத்தை தொடரணும்னு அவருக்கு ஆசை இருக்குறதால இனிமேல் பிரச்சினை இல்லை. கூடவே அவருக்கு சளித்தொல்லை இருக்குனு சொன்னார். பச்சிலை ஒன்றை தேனுடன் கலந்து சாப்பிடச்சொன்னேன். ரெண்டே நாள்ல தும்மல் போடுற‌து குறைஞ்சிருக்குனு சொன்னார். இந்த வைத்தியம் எல்லாமே எனக்கு கைமேல் கிடைத்த பலனாகத்தான் கருதுகிறேன். ஏன்னு சொன்னா, நோய் நொடிகளால மக்கள் படுற கஷ்டங்களையும், அதுக்காக காசு பணத்தை கொட்டியும் நிவாரணம் கிடைக்காம அவதிப்படுறதயும் பார்த்து மனசு ரொம்பவே கஷ்டமா இருக்கு. எல்லோருக்கும் முடிய்லைன்னாலும் நம்மால் முடிஞ்சவங்களுக்கு வைத்தியம் செய்யணும். அதுக்கு அந்த ஆண்டவன்தான் கருணை காட்டணும்.

0 comments :

Post a Comment