எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Monday, January 10, 2011

வாய்ப்புண்ணா? வயித்துப்புண்ணா?

9‍ ந்தேதி (9.1.2011) சென்னை பச்சையப்பா கல்லூரி எதிரே நடந்த புத்தக கண்காட்சிக்கு குடும்பத்தோடு போயிருந்தேன். வாங்கும் சக்தி இருந்தால் வாங்கிவிடலாம். ஆனாலும் இந்தமுறை எந்தமுறையும் இல்லாத அளவுக்கு புத்தகங்கள் வாங்கினேன் குழந்தைகளுக்கு தேவையான படிப்பு சம்பந்தமான புத்தகங்கள், பொது அறிவு மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன், ஐசக்  நியூட்டன், அப்துல்க‌லாம் போன்றவர்களைப்பற்றி எழுதப்பட்டிருந்த புத்தகங்கள், மூலிகை புத்தகங்கள் போன்றவை வாங்கினோம். மக்கள்கூட்டம் அலைமோதியது, மகிழ்ச்சியான விஷயம். புத்தகம் படிக்கும் பழக்கம் மக்களிடையே இன்னமும் இருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது. இது தொடர வேண்டும்.
சரி இன்று வேறொரு வைத்தியம் பற்றி பார்ப்போமா? வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சிகிச்சை எடுத்துக்கொள்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எளிமையான சில வைத்தியங்களை சொல்கிறேன். சிலபேருக்கு இந்த பிரச்சினை இருந்தால் வாய் துர்நாற்றம் வீசும். இப்படிப்பட்டவர்கள் உட்னே செய்ய வேண்டியது நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய மாசிக்காயை வாங்கி சிறிய துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். பாக்கை மெல்லுவதுபோல் மென்று உமிழ்நீரை விழுங்கினால் வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாகி விடும். அதேபோல் சிறிய தேங்காய்த்துண்டை மெல்லுவது, தேங்காயை துருவி நீர் சேர்த்து வாய் கொப்புளிப்பது, அகத்திக்கீரை மற்றும் மணத்தக்காளிக்கீரை சமையல் அல்லது பச்சையாக மென்று சாறை விழுங்குவதன்மூலம் வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாகும். அம்மான்பச்சரிசி இலையை பச்சையாக சாப்பிட்டாலும் இந்த பிரச்சினை சரியாகும்.

0 comments :

Post a Comment