டிஜிட்டலுக்கு மாறும் உலகம்
இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.
Thursday, February 27, 2014
Friday, February 21, 2014
Thursday, February 6, 2014
ஆண்களுக்கு கைகொடுக்கும் முருங்கை!
கிராமப்புறங்கள்ல வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருக்கும். ஆனா அந்த மரத்துல வேர் முதல் பூ வரை எல்லாத்திலயும் மருத்துவக்குணங்கள் இருக்குங்கிறது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க... சரி நான் நேராவே விஷயத்துக்கு வாரேன். இன்னைக்கி சூழல்ல ஆண்மைக்குறை, நரம்புத்தளர்ச்சி, விந்துக்குறைபாடுகளால குழந்தை இல்லாம மனசு புழுங்கி கிடக்கிறாங்க. இதுக்கெல்லாம் இன்னைக்கு உள்ள சாப்பாடும், சுற்றுச்சூழலும் ஒரு காரணமா இருந்தாலும் தங்களோட பிரச்சினைகளை தீர்க்குறதுக்காக கோயில், குளம்னு அலையுறதோட சித்த வைத்தியத்துல தொடங்கி அலோபதி வரைக்கும் மக்கள் போய் பார்த்துட்டு வர்றாங்க. இதுல சில பேருக்கு வெற்றி கிடைக்கு, பல பேருக்கு தோல்வி மேல் தோல்விதான். அப்படிப்பட்டவங்க கண்ணை மூடிக்கிட்டு என்னை நம்புறதைவிட முருங்கையை நம்புங்க, உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி 100 மில்லி பாலோட 100 மில்லி தண்ணி சேர்த்து கூடவே ஒரு கைப்பிடி முருங்கைப்பூவும் போட்டு பாதியா வத்துற அளவுக்கு நல்லா காய்ச்சி சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. இப்பிடி ஒரு மாசம் சாப்பிட்டு பாருங்க, கைமேல பலன் கிடைக்கும். அதேபோல முருங்கைப்பிசினை தண்ணியில ஊறப்போட்டு காலையில எழுந்திரிச்சதும் நல்லா கரைச்சி குடிக்கணும். அதேமாதிரி அடிக்கடி வீட்டுல முருங்கைக்கீரை பொரியல், துவட்டல் செஞ்சி சாப்பிடுங்க. முருங்கைப்பூவையும் இப்பிடி செஞ்சி சாப்பிடலாம். இது எல்லாத்துக்கும் மேலா முருங்கைக்காயை பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே நம்ம பாக்கியராஜ் சார் முந்தானை முடிச்சு படத்துல முருங்கைக்காயை பத்தி நல்லாவே சொல்லியிருக்காரு. அதனால அடிக்கடி முருங்கைக்காயை குழம்பு, சாம்பார், கூட்டு செஞ்சி சாப்பிடுங்க. அதுலயும் முக்கியமா முருங்கைக்காய்ல இளம் பிஞ்சு காயை பால்ல வேக வச்சி சாப்பிடுங்க. இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம், முருங்கையை பத்தி..! ஆக ஒட்டு மொத்தமா முருங்கையை நம்பினா ஆம்பிளைங்களுக்கு கொண்டாட்டம்தான் போங்க... இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.
Sunday, February 2, 2014
ஹார்ஸ் பவர் தரும் கேரட்!
குதிரைக்கு மிக முக்கிய உணவாக புல்லும், கொள்ளும், கேரட்டும் கொடுக்கப்படுகிறது. குதிரையின் சக்தியை ‘ஹார்ஸ் பவர்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம். கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும். டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.
குடல் நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் நோய்களுக்கும் கேரட் நல்லது. மேலும் மலட்டுத்தன்மையை போக்கக்கூடியது. புற்றுநோய் செல்களை ரத்தத்தில் வாழ விடாமல் செய்யக்கூடியது. அதுமட்டுமல்ல புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது கேரட். கண் பார்வைக்கும் மிக நல்லது. எனவே அவ்வப்போது கேரட் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
கேரட்டை துருவிப்போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்புடன் தயிர் சேர்த்து பச்சடியாக சாப்பிடலாம். தயிர் சேர்த்த இந்த பச்சடியை கோழி, ஆடு போன்றவற்றின் உணவுகளை சாப்பிடும்போது சாப்பிடக்கூடாது. பலர் ருசிக்காக இப்படித்தான் சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வெள்ளை விழுதல் என்று சொல்லக்கூடிய வெண் தேமல், வெண்குஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.