எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Thursday, February 27, 2014


கண் நோய்களை சரியாக்கும் மூக்கிரட்டை! மூக்கிரட்டை, மூக்குறட்டை. பேரைக்கேட்டாலே வித்தியாசமா இருக்குல்ல. ஆனா இந்த மூக்கிரட்டை ரொம்ப சாதாரணமா குப்பைமேடுகள்ல வளர்ந்து கிடக்கும். தண்ணி இருந்தாலும், இல்லைனாலும் பரவாயில்லை. இது தானாவே வளரும். செடி வகையைச்சேர்ந்ததுதான்... ஆனா தரையில கொடி மாதிரி படர்ந்து வளரும் இந்த மூக்கிரட்டை. குப்பைக்கீரை மாதிரி வேற சில கலவைக்கீரைகளோட சேர்த்து இந்த மூக்கிரட்டையையும் கடைஞ்சி சாப்பிடுவாங்க. கிராமப்புறங்கள்லயும், நகரங்களிலும்கூட கலவைக்கீரைகளை சாப்பிடுவாங்க, ஆனா யாருக்கும் இந்த கீரைகளோட பலன் தெரியாது. நெய் சேர்த்து பொரியலாவோ, வெறுமனே கடைஞ்சோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தா கண் சம்பந்தமான எல்லா கோளாறுகளும் சரியாகும். கூடவே மலச்சிக்கல் சரியாறதோட இருதயத்துக்கு நல்ல பலத்தை தரும். சிறுநீரை பிரிச்சி ரொம்ப சாதாரணமா வெளியேத்தி காமாலை நோய், சைனஸ் பிரச்சினை, வாதநோய் எல்லாத்தையும் சரி பண்ணும். வேரை கசாயம் பண்ணி குடிச்சா மூட்டு எலும்புகள்ல வரக்கூடிய வாதம், தொப்பை, ரத்தசோகை எல்லாம் சரியாகும். ஒரு கைப்பிடி வேரும், 4 மிளகும் சேர்த்து 100 மில்லி விளக்கெண்ணெய்ல வாசனை வரும் வரைக்கும் காய்ச்சி ஆறினதும் வடிகட்டி வச்சிக்கிடணும். இதை 6 மாச குழந்தைக்கு 15 மில்லியும், அதுக்கு மேல உள்ள குழந்தைகளுக்கு 30 மில்லியும் சாப்பிட கொடுத்துட்டு வந்தா முக்கி முனகிக்கிட்டு மலம் போறது, மூலச்சூடு, மலக்கழிச்சல்னு சொல்லக்கூடிய வயித்தால போற பிரச்சினை, வாந்தி, ஜீரணக்கோளாறு, சொறி சிரங்குன்னு எல்லாம் சரியாகும்

Friday, February 21, 2014


வயிற்றுவலி விரட்டும் புதினா! புதினாவோட மகிமை எத்தனைபேருக்கு தெரியும், சொல்லுங்க. ஏதோ வாசனைக்காக கறிக்குழம்புல பேருக்குகொஞ்சமா சேர்ப்போம், அவ்வளவுதான். ஆனா புதினா நல்ல மருந்து. முக்கியமா பச்சக்குழந்தைங்க வயித்துவலியால அவதிப்படும்போது ‘வீல் வீல்’னு கத்தும். இந்த மாதிரி நேரங்கள்ல 10 புதினா இலைகளை எடுத்து சட்டியில போட்டு வதக்குங்க. (வெறுமனே வதக்கணும், எண்ணெய் ஊத்த வேண்டாம்) பிறகு 50 மில்லி அளவு தண்ணிய வதக்கின புதினாவோட ஊத்தி காய்ச்சணும். தண்ணி வத்தி சூடு ஆறுனதும் காலைலயும், மத்தியானமும், சாயங்காலமும் சங்குல (பாலாடை) ஊத்தி குடுத்தா வயிறுவலி போறதோட வாந்தி, வயித்துப்போக்கு, ஜீரணக்கோளாறுனு வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சினைகளும் சரியாகிடும். இந்த புதினா கசாயம் குழந்தைகளுக்கு மட்டுமில்ல... பெரியவங்களுக்கு வரக்கூடிய வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு கைமேல பலன் தரும். ஏன்... பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு வரக்கூடிய நேரங்கள்ல வரக்கூடிய வயித்துவலிக்கும் இதே கசாயம் சூப்பர் மருந்து. துவையலா செஞ்சி சாப்பிட்டாலும்கூட இதே பிரச்சினை சரியாகும். புதினாவை கசாயமாவோ, சூப்பாவோ, துவையலாவோ செஞ்சி சாப்பிட்டு வந்தா வயிறு பிரச்சினைகளோட இருதய சம்பந்தமான நோய்களும் சரியாகும். புதினாவை வெறுமனே இல்லாம கறிவேப்பிலை, கொத்தமல்லி கீரையோட சேர்த்து வதக்கி துவையல் செஞ்சி சாப்பிட்டா கூடுதல் மருத்துவக்குணம் கிடைக்கும். மத்தபடி புதினாக்கீரையில பல்பொடி செஞ்சி பல் விளக்கினா பல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளும் சரியாகும். புதினாவுல பல்பொடியான்னு நீங்க கேக்கலாம், சொல்றேன். புதினாவை சுத்தம் பார்த்து தண்ணியில கழுவி வெயில்ல நல்லா காய வைங்க. காய்ஞ்சு சருகான புதினாவை லேசா வதக்கி அதுல 8 பங்கு எடுத்துக்கோங்க... அதோட ஒரு பங்கு உப்பை சேர்த்து பொடியாக்கி பல் தேய்ச்சிட்டு வந்தா பல் பளிச்சின்னு ஆயிரும். என்ன புதினா வாங்க கிளம்பிட்டீங்களா?

Thursday, February 6, 2014

ஆண்களுக்கு கைகொடுக்கும் முருங்கை! கிராமப்புறங்கள்ல வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருக்கும். ஆனா அந்த மரத்துல வேர் முதல் பூ வரை எல்லாத்திலயும் மருத்துவக்குணங்கள் இருக்குங்கிறது எத்தனை பேருக்கு தெரியும் சொல்லுங்க... சரி நான் நேராவே விஷயத்துக்கு வாரேன். இன்னைக்கி சூழல்ல ஆண்மைக்குறை, நரம்புத்தளர்ச்சி, விந்துக்குறைபாடுகளால குழந்தை இல்லாம மனசு புழுங்கி கிடக்கிறாங்க. இதுக்கெல்லாம் இன்னைக்கு உள்ள சாப்பாடும், சுற்றுச்சூழலும் ஒரு காரணமா இருந்தாலும் தங்களோட பிரச்சினைகளை தீர்க்குறதுக்காக கோயில், குளம்னு அலையுறதோட சித்த வைத்தியத்துல தொடங்கி அலோபதி வரைக்கும் மக்கள் போய் பார்த்துட்டு வர்றாங்க. இதுல சில பேருக்கு வெற்றி கிடைக்கு, பல பேருக்கு தோல்வி மேல் தோல்விதான். அப்படிப்பட்டவங்க கண்ணை மூடிக்கிட்டு என்னை நம்புறதைவிட முருங்கையை நம்புங்க, உங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி 100 மில்லி பாலோட 100 மில்லி தண்ணி சேர்த்து கூடவே ஒரு கைப்பிடி முருங்கைப்பூவும் போட்டு பாதியா வத்துற அளவுக்கு நல்லா காய்ச்சி சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்க. இப்பிடி ஒரு மாசம் சாப்பிட்டு பாருங்க, கைமேல பலன் கிடைக்கும். அதேபோல முருங்கைப்பிசினை தண்ணியில ஊறப்போட்டு காலையில எழுந்திரிச்சதும் நல்லா கரைச்சி குடிக்கணும். அதேமாதிரி அடிக்கடி வீட்டுல முருங்கைக்கீரை பொரியல், துவட்டல் செஞ்சி சாப்பிடுங்க. முருங்கைப்பூவையும் இப்பிடி செஞ்சி சாப்பிடலாம். இது எல்லாத்துக்கும் மேலா முருங்கைக்காயை பத்தி நான் சொல்ல வேண்டியதில்லை. ஏற்கனவே நம்ம பாக்கியராஜ் சார் முந்தானை முடிச்சு படத்துல முருங்கைக்காயை பத்தி நல்லாவே சொல்லியிருக்காரு. அதனால அடிக்கடி முருங்கைக்காயை குழம்பு, சாம்பார், கூட்டு செஞ்சி சாப்பிடுங்க. அதுலயும் முக்கியமா முருங்கைக்காய்ல இளம் பிஞ்சு காயை பால்ல வேக வச்சி சாப்பிடுங்க. இப்பிடி சொல்லிக்கிட்டே போகலாம், முருங்கையை பத்தி..! ஆக ஒட்டு மொத்தமா முருங்கையை நம்பினா ஆம்பிளைங்களுக்கு கொண்டாட்டம்தான் போங்க... இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன்.

Sunday, February 2, 2014

ஹார்ஸ் பவர் தரும் கேரட்! குதிரைக்கு மிக முக்கிய உணவாக புல்லும், கொள்ளும், கேரட்டும் கொடுக்கப்படுகிறது. குதிரையின் சக்தியை ‘ஹார்ஸ் பவர்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம். கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும். டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும். குடல் நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் நோய்களுக்கும் கேரட் நல்லது. மேலும் மலட்டுத்தன்மையை போக்கக்கூடியது. புற்றுநோய் செல்களை ரத்தத்தில் வாழ விடாமல் செய்யக்கூடியது. அதுமட்டுமல்ல புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது கேரட். கண் பார்வைக்கும் மிக நல்லது. எனவே அவ்வப்போது கேரட் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். கேரட்டை துருவிப்போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்புடன் தயிர் சேர்த்து பச்சடியாக சாப்பிடலாம். தயிர் சேர்த்த இந்த பச்சடியை கோழி, ஆடு போன்றவற்றின் உணவுகளை சாப்பிடும்போது சாப்பிடக்கூடாது. பலர் ருசிக்காக இப்படித்தான் சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வெள்ளை விழுதல் என்று சொல்லக்கூடிய வெண் தேமல், வெண்குஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.