எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, February 27, 2014


கண் நோய்களை சரியாக்கும் மூக்கிரட்டை! மூக்கிரட்டை, மூக்குறட்டை. பேரைக்கேட்டாலே வித்தியாசமா இருக்குல்ல. ஆனா இந்த மூக்கிரட்டை ரொம்ப சாதாரணமா குப்பைமேடுகள்ல வளர்ந்து கிடக்கும். தண்ணி இருந்தாலும், இல்லைனாலும் பரவாயில்லை. இது தானாவே வளரும். செடி வகையைச்சேர்ந்ததுதான்... ஆனா தரையில கொடி மாதிரி படர்ந்து வளரும் இந்த மூக்கிரட்டை. குப்பைக்கீரை மாதிரி வேற சில கலவைக்கீரைகளோட சேர்த்து இந்த மூக்கிரட்டையையும் கடைஞ்சி சாப்பிடுவாங்க. கிராமப்புறங்கள்லயும், நகரங்களிலும்கூட கலவைக்கீரைகளை சாப்பிடுவாங்க, ஆனா யாருக்கும் இந்த கீரைகளோட பலன் தெரியாது. நெய் சேர்த்து பொரியலாவோ, வெறுமனே கடைஞ்சோ தொடர்ந்து சாப்பிட்டு வந்தா கண் சம்பந்தமான எல்லா கோளாறுகளும் சரியாகும். கூடவே மலச்சிக்கல் சரியாறதோட இருதயத்துக்கு நல்ல பலத்தை தரும். சிறுநீரை பிரிச்சி ரொம்ப சாதாரணமா வெளியேத்தி காமாலை நோய், சைனஸ் பிரச்சினை, வாதநோய் எல்லாத்தையும் சரி பண்ணும். வேரை கசாயம் பண்ணி குடிச்சா மூட்டு எலும்புகள்ல வரக்கூடிய வாதம், தொப்பை, ரத்தசோகை எல்லாம் சரியாகும். ஒரு கைப்பிடி வேரும், 4 மிளகும் சேர்த்து 100 மில்லி விளக்கெண்ணெய்ல வாசனை வரும் வரைக்கும் காய்ச்சி ஆறினதும் வடிகட்டி வச்சிக்கிடணும். இதை 6 மாச குழந்தைக்கு 15 மில்லியும், அதுக்கு மேல உள்ள குழந்தைகளுக்கு 30 மில்லியும் சாப்பிட கொடுத்துட்டு வந்தா முக்கி முனகிக்கிட்டு மலம் போறது, மூலச்சூடு, மலக்கழிச்சல்னு சொல்லக்கூடிய வயித்தால போற பிரச்சினை, வாந்தி, ஜீரணக்கோளாறு, சொறி சிரங்குன்னு எல்லாம் சரியாகும்

0 comments :

Post a Comment