எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Tuesday, March 4, 2014

கறிவேப்பிலை, கருவேப்பிலை... இது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். நம்ம வீடுகள்ல சமையல்ல கட்டாயம் கறிவேப்பிலை இருக்கும். ஆனா சாப்பிட உக்காந்த உடனே முதல் வேலையா கறிவேப்பிலையை தூக்கி தூர வச்சிட்டுதான் சாப்பிடுவோம். கறிவேப்பிலையில எவ்வளவு உயிர்ச்சத்து இருக்குங்கறது நமக்கு தெரியாது. வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாம சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கு. கறிவேப்பிலையை துவையல் செஞ்சி சூடான சாதத்தோட சேர்த்து முதல் கவளத்தோட தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புக்கு பலம் கிடைக்கும். புது ரத்தம் ஊறும். பல்லும், எலும்பும் உறுதியாகும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராது. துவையல் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேர் கேக்குறாங்க. அப்பிடிப்பட்டவங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ். கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கோங்க. கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, புளி எல்லாத்தையும் பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கி சூடு ஆறினதும் உப்பு சேர்த்து அம்மியில வச்சி மையா அரைச்சி சாப்பிட்டா அதோட பலனே தனிதான். ஒருநாள் ராத்திரி துவையல் சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் தாராளமா போறதோட வாயுத்தொல்லையும் விலகிப்போயிரும். இப்போவெல்லாம் காய்ச்சல் வந்து மக்களை பாடாப்படுத்துது. காய்ச்சலுக்கு புதுசு புதுசா பேரு வைக்கிறாங்க. அப்பிடி வரக்கூடிய காய்ச்சல்கை-கால்ல வலியை உண்டாக்குறதோட முடக்குவாதம் மாதிரி வந்து ஒரு வழி பண்ணுது. எது எப்பிடியோ எந்த மாதிரியான காய்ச்சல் வந்தாலும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுங்க, கொஞ்சம் சீரகம், அளவுல குறைச்சலா மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையா அரைச்சி எடுங்க. அதோட கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடணும். கட்டியா இருக்குறதால கொஞ்சம் வெந்நீர் சேர்த்து குடிக்கலாம். காலையிலயும், சாயங்காலமுமா மூணு நாள் இதே மாதிரி சாப்பிட்டு வந்தா காய்ச்சல் வந்த இடம் பார்த்து போயிரும். பித்தத்தால் புத்தி மாறாட்டம் வந்தவங்களுக்கு கறிவேப்பிலையை துவையலா அரைச்சி எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தோட சேர்த்து சாப்பிட்டா பைத்தியம் தெளிஞ்சிரும். இப்பிடி கறிவேப்பிலையால பல பலன்கள் இருக்கு. Photo: காய்ச்சலை துரத்தும் கறிவேப்பிலை! கறிவேப்பிலை, கருவேப்பிலை... இது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். நம்ம வீடுகள்ல சமையல்ல கட்டாயம் கறிவேப்பிலை இருக்கும். ஆனா சாப்பிட உக்காந்த உடனே முதல் வேலையா கறிவேப்பிலையை தூக்கி தூர வச்சிட்டுதான் சாப்பிடுவோம். கறிவேப்பிலையில எவ்வளவு உயிர்ச்சத்து இருக்குங்கறது நமக்கு தெரியாது. வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாம சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கு. கறிவேப்பிலையை துவையல் செஞ்சி சூடான சாதத்தோட சேர்த்து முதல் கவளத்தோட தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புக்கு பலம் கிடைக்கும். புது ரத்தம் ஊறும். பல்லும், எலும்பும் உறுதியாகும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராது. துவையல் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேர் கேக்குறாங்க. அப்பிடிப்பட்டவங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ். கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கோங்க. கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, புளி எல்லாத்தையும் பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கி சூடு ஆறினதும் உப்பு சேர்த்து அம்மியில வச்சி மையா அரைச்சி சாப்பிட்டா அதோட பலனே தனிதான். ஒருநாள் ராத்திரி துவையல் சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் தாராளமா போறதோட வாயுத்தொல்லையும் விலகிப்போயிரும். இப்போவெல்லாம் காய்ச்சல் வந்து மக்களை பாடாப்படுத்துது. காய்ச்சலுக்கு புதுசு புதுசா பேரு வைக்கிறாங்க. அப்பிடி வரக்கூடிய காய்ச்சல் கை-கால்ல வலியை உண்டாக்குறதோட முடக்குவாதம் மாதிரி வந்து ஒரு வழி பண்ணுது. எது எப்பிடியோ எந்த மாதிரியான காய்ச்சல் வந்தாலும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுங்க, கொஞ்சம் சீரகம், அளவுல குறைச்சலா மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையா அரைச்சி எடுங்க. அதோட கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடணும். கட்டியா இருக்குறதால கொஞ்சம் வெந்நீர் சேர்த்து குடிக்கலாம். காலையிலயும், சாயங்காலமுமா மூணு நாள் இதே மாதிரி சாப்பிட்டு வந்தா காய்ச்சல் வந்த இடம் பார்த்து போயிரும். பித்தத்தால் புத்தி மாறாட்டம் வந்தவங்களுக்கு கறிவேப்பிலையை துவையலா அரைச்சி எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தோட சேர்த்து சாப்பிட்டா பைத்தியம் தெளிஞ்சிரும். இப்பிடி கறிவேப்பிலையால பல பலன்கள் இருக்கு.

0 comments :

Post a Comment